ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

வடமேல் மாகாண நடைப் போட்டி

வடமேல் மாகாண நடைப் போட்டி

வடமேல் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச செயலகம் என்பன ஏற்பாடு செய்திருந்த வடமேல் மாகாண ஆண் மற்றும் பெண்களுக்கான நடை போட்டி நேற்று முன்தினம் (சனி) புத்தளம் நகரில் இடம்பெற்றது.

புத்தளம் அநுராதபுர வீதி சந்தியில் ஆரம்பமாகிய நடைப் போட்டி அநுராத புர வீதி புகையிரத கடவை சுற்று வளைவுடன் மீண்டும் அநுராதபுர வீதி சந்தியில் நிறைவு பெற்றது.

வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டீ.பீ. ஹேரத், வடமேல் மாகாண விவசாய கடற்றொழில், கடற்றொழில், கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, சிறிய நீர்ப்பாசன அபிவிருத்தி விவகார அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ. பாயிஸ் ஆகியோர் மேல்மாகாண நடைப் போட்டிக்கு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தை பீ.டீ. உபுல் மஞ்சநாயக்கவும் 2ம் இடத்தை ஏ.எம். பீ.பீ. அதிகாரியும் 3ம் இடத்தை கே.ஜீ.எஸ்.கே. அபேரத்னவும் பெற்றுக் கொண்டனர். பெண்கள் பிரிவில் 1ம் இடத்தை டீ.டீ. அவந்தி ஜயரங்கவும் 2ம் இடத்தை என்.ஏ. பூரி சந்து நிஸங்கவும் 3ம் இடத்தை ஏ.எம். டிலானி லக்ஷிகாவும் பெற்றுக் கொண்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி