கர்ப்பிணிப் பெண்ணின் உயிர்காப்பு கருவியை நீக்க உத்தரவு
கர்ப்பிணிப் பெண்ணின் உயிர்காப்பு
கருவியை நீக்க உத்தரவு
டெக்ஸாஸ் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பம் தரித்திருந்த காரணத்தால் உயிரோடு
வைக்கப்பட்டிருந்த, மூளை இறந்துபோன பெண் ஒருவருக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர்
காப்புக் கருவிகளை நீக்குமாறு அமெரிக்க நீதிபதி ஒருவர் உத்தரவிட்டிருக்கிறார்.
இரு மாதங்களுக்கு முன்னதாக நினைவிழந்த நிலையில் இந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டபோது
அவர் 14 வார கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த மாதிரியான நிலையில் துணை மருத்துவ ஊழியர்களாக இருந்த தானும் தனது மனைவியும்
உயிர்காப்புக் கருவிகளை விரும்பவில்லை என்று அந்தப் பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.
ஆனால் பிறக்காத குழந்தையின் உயிரைக் காக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக
மருத்துவமனை வாதாடியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை கருக்கலைப்பு தொடர்பான மிகவும் கடுமையான கட்டுப் பாடுகளைக்
கொண்ட ஒரு மாநிலமாக டெக்ஸாஸ் திகழ் கிறது என்றும் இந்த விவகாரம் அங்க இரு
தரப்புக்கும் ஆதரவான பிரச்சாரங்களை விவாதத்துக்கு இழுத்து விட்டிருக்கிறது என்றும்
கூறப்படுகிறது.