நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபருக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அந்நபருக்கு நீதவான் ஒருவருட கடூழியச்
சிறைத் தண்டனையையும் 15000 ரூபா அபராதமும் விதித்துள்ளார்.
குருநாகலை நீதவான் நீதிமன்றத்தில் (21.08.13) நீதவான் ரவீந்திர பிரேமரட்ன
முன்னிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
போலியான அனுமதிப் பத்திரத்துடன் கடல் சிப்பிகளின் ஓடுகளை சட்டவிரோதமாக வாகனம்
ஒன்றில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொலிசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபருக்கு பதிலாக வேறொரு நபர்
மோசடியான வகையில் நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆள் மாறாட்டம்
செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நீதவான் ஒரு வருட கடூழியச்
சிறைத்தண்டனையும் 15000 ரூபா அபராதமும் விதித்தது தீர்ப்பு வழங்கினார்.