ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

சி.சி.டி.வி. கமராவின் உதவியுடன் கொள்ளையர்களின் படங்கள் சிக்கின

கம்பஹா லீசிங் நிறுவனக் கொள்ளை;

சி.சி.டி.வி. கமராவின் உதவியுடன் கொள்ளையர்களின் படங்கள் சிக்கின

கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்

கம்பஹா நகரில் உள்ள லீசிங் நிதி நிறுவனம் ஒன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் பணக் கொள் ளையில் ஈடுபட்ட வர்களின் புகைப்படம் கிடைக்கப்பெற்றுள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தி ஊழியர்களை சிறைப்படுத்தி அங்கிருந்து ஒருகோடியே 68 இலட்சத்து 80 ஆயிரத்து 600 ரூபா (168,80,600.00) பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 11 இலட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபா (1,179,800.00) பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். குறித்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி. சி. டி. வி. கமரா ஊடாக கொள்ளையர்களின் புகைப்படம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குறித்து தகவல் தெரிந்தோர் கீழ் காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சரியான தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் திணைக்களம் 10 இலட்சம் ரூபா பணப் பரிசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண வடக்கு : 0777 923922, 0112911197

பொலிஸ் அதிகாரி - கம்பஹா : 077 4784646, 033 2222228

பொறுப்பாளர் குற்றத்தடுப்புப் பிரிவு மேல் மாகாண வடக்கு : 077 3917092, 011 2947780.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி