கூகிள் தனது மின்னஞ்சல் சேவையில் கடவுச் சொல்லுக்கு பதில் மாற்று வழியை
பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இதில் பயனர்கள் தனது ஸமார்ட் போன்
கையடக்க தொலைபேசி அல்லது சிரிய சிப் கருவி மூலம் மின்னஞ்சலை திறப்பது குறித்து
கூகிள் ஆலோசித்து வருகிறது.
கூகிள் தனது 500 மில்லியன் மின்னஞ்சல் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது
குறித்து ஆலோசித்து வருகிறது. இதில் சம்பிரதாயமான மின்னஞ்சலை திறக்கும் கடவுச்
சொல்லுக்கு பதில் மாற்று வழியை பயன்படுத்த கூகிள் நிறுவனம் யுபிகொ என்ற
நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளது.
இணைய ஊடுருவிகளிடம் இருந்து எமது பயனர்களை
பாதுகாக்க கடவுச் சொற்கள் மற்றும் கூகிக்கள் போதுமானதாக இல்லை என கூகிள் பாதுகாப்பு
பிரிவின் துணைத் தலைவர் எரிக் கிரொஸ் குறிப்பிட்டார்.