டிசம்பர் 2010: தெருவோர வியாபாரி பவ்சிசி தீக்குளித்துக் கொண்டதை அடுத்து அரச
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடு பூராகவும் பரவின. பவ்சிசி தீக்காயங்களுடன்
மருத்துவமனையில் மரணமடைந்தார்.
ஜனவரி 2011: ஆர்ப்பாட்டம் தீவிரமடைய மூன்று தசாப்தங்கள் நாட்டை ஆண்ட ஜனாதிபதி சின்
அல் அப்தின் பென் அலி பதவி விலகி சவூதிக்கு தப்பிச் சென்றார்.
மார்ச் 2011: இடைக்கால ஜனாதிபதியால் நிபுணர்களைக் கொண்ட அரசு அமைக்கப்பட்டது.
ஒக்டோபர் 2011: அரபு எழுச்சியின் முதல் பொதுத் தேர்தல் துனீஷியாவில் இடம்பெற்றது.
டிசம்பர் 2011: முன்னாள் அரச எதிர்ப்பாளரான மொன்கப் மர்சுக்கி ஜனாதிபதியாக
தெரிவானதோடு இஸ்லாமியவாத கட்சியான அன்ஹதாவின் ஹமதி ஜபலி பிரதமராக நியமனமானார்.
மே 2012: மதுபான விற்பனை தொடர்பில் சலபி இஸ்லாமியவாதிகள் பொலிஸாருடன் மோதலில்
ஈடுபட்டனர்.
ஜூன் 2012: 2011இல் ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி
பென் அலிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவரை நாடுகடத்த சவூதி மறுத்தது.
பெப்ரவரி 2013: முன்னணி எதிர்க்கட்சி தலைவர் சொக்ரி பிளைடி சுட்டுக்கொல்லப்பட்டார்;
நிபுணர்களைக் கொண்ட அரசை அமைக்க பிரதமர் அறிவித்தார். பிரதமரின் ஆளும் கட்சியான
அன்ஹதா இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டது.