மத்திய மாகாணத்தைப் பொறுத்தளவில் நுவரெலிய மாவட்டமே தாய் - சேய் மரண விகிதம்
குறைந்த நிலையில் காணப்படும் மாவட்டமாகத் திகழ்வதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள்
பணிப்பாளர் சாந்தி சமரசிங்க தெரிவித்தார்.
இதற்கு முக்கிய காரணம் தோட்டப்புற மக்களின் சுகாதார நலன் மீது அரசாங்கம் காட்டி
வரும் அக்கறையே எனவும் தெரிவித்த அவர், தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசாங்கம்
பொறுப்பேற்று நிர்வகிப்பதும், பிரதேசங்கள், கிராமங்கள் தோறும் சுகாதார சேவை
அதிகாரிகள் குடும்ப நல மாதுக்கள் போன்றோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து சேவைகளை
விரிவுபடுத்தியமையுமே இதற்கு அடிப்படை எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.