யாழ். மாவட்ட மெய்வன் மைச் சங்கத்தினால் மாவட்ட மட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டி
எதிர்வரும் 24 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 19 வயதுக்கு
மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட
மெய்வன்மைச் சங்கத்தின் தலைவர் ஆர். ரமணன் அறிவித்துள்ளார்.
குறிப்பிட்ட போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கான விண்ணப்பப் படிவங்களை யாழ்ப்பாணம்,
காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள றிக்கோ விடுதியில் பெற்றுக் கொள்ள முடியும்
எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. பெண்கள், ஆண்கள் என இருபாலாருக்கும் இந்தப் போட்டி
நடைபெறவுள்ளது.