புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
நாட்டில் ஜனநாயகம்தான் மலர்ந்திருக்கிறதே தவிர தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லையாம்

நாட்டில் ஜனநாயகம்தான் மலர்ந்திருக்கிறதே தவிர தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லையாம்

அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களிடம் கவலை வெளியிட்ட சீ.வி

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு வெள்ளிக்கிழமை 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரை யாடினார்கள்.

ஜனவரியின் பின்னரான மாற்றத்தினை எவ்வாறு எதிர்பார்க்கின்aர்கள் என அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தான் பதிலளிக்கையில், மாற்றம் ஏற்பட்டமை நல்ல விடயம் என்று கூறியதாகவும் முதலமைச்சர் கூறினார்.

நாட்டினை முழுமையாக பார்த்தால் ஜனநாயக ரீதியில் நன்மையை தந்துள்ளது. தனிப்பட்ட வகையில், தமிழ் மக்களின் நலனுக்காக பார்த்தால் நன்மை தந்ததாக தெரியவில்லை. யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

இராணுவம் யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேநேரம் 64 ஆயிரம் ஏக்கர் காணியில் 1000 ஏக்கரை மட்டும் மக்களுக்கு விடுவித்துள்ளனர்.

உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்aர்களாக என செனட் உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு அவர் ஆம், உள்ளக விசாரணையினை நாங்கள் எதிர்க்கின்றோம். அனைத்து தமிழ் மக்களும் சர்வதேச விசாரணையினை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

(எஸ்.தில்லைநாதன்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.