புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

ராசி பலன்

மேடம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இந்த வாரம் உறவினர்களின் வருகை மற்றும் பொது விழாக்களில் கலந்து கொள்வது என வாரம் முழுவதுமே சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

பெண்கள் - அஷ்டம சனி ஆகையினால் சிலருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு உடல் நல குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை.

வியாபாரம் - தொழிலில் கூடுதல் வருமானம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழிலில் மன வேற்றுமை வரலாம். தனியார் தொழில் சிறப்படையும். புது தொழில் தொடங்கும் எண்ணம் தள்ளி போடவும்.

உத்தியோகம் - அரசு, பணி, தனியார் தொழிலில் லாபம் உண்டு. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இதுவரை இருந்த மனசஞ்சலம் இனி வேண்டாம். பணியில் இடமாற்றம் நல்ல திருப்பத்தை தரும்.

பரிகாரம் - சனி கிழமை ஹனுமானுக்கு அர்ச்சினை செய்யவும். ஞாயிறன்று காளி தெய்வத்திற்கு 4 தீபம் ஏற்றி வணங்கவும்.

இடபம் (கார்த்திகை 2ம், 3ம், 4ம், பாதம், ரோகிணி, - மிருகசீரிடம் 1ம், 2ம், பாதம்)

இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த மனச் சுமை, பாரம் இந்த வாரத்தில் நீங்கும். குடும்பம், அலுவலகம் எதுவாக இருந்தாலும் உங்களுடைய மனக்கவலை தீரும் வாரமாக அமையும்.

பெண்கள் - குடும்பத்தில் இதுவரை இருந்த வந்த மன அழுத்தம் நீங்கும். பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் சேரும் வாய்ப்பு உள்ளது. பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளினால் இருந்த குழப்பம் தீரும்.

உத்தியோகம் - அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். இது அவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தனியார் பணியில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனதில் திருப்தி இருக்கும்.

வியாபாரம் - தொழில் சிறப்படையும். புதுத் தொழில் தொடக்கம், விஸ்தரிப்பு இரண்டுமே பலன் உண்டு. கூட்டுத் தொழிலில் புது நபர் சேர்க்கை இப்போது வேண்டாம்.

பரிகாரம் - இந்த வாரம் செவ்வாய் அன்று துர்க்கையை தரிசனம் செய்யுங்கள். முருகப்பெருமானை வணங்கிவிட்டு 9 நெய் தீபம் ஏற்றவும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை, புனர்பு+சம் 1ம், 2ம், 3ம், பாதம்)

இந்த வாரம் மனதில் அழுத்தம் இருந்தாலும் நண்பர்கள் மற்றும் தெய்வ பணியால் சரியாகிவிடும். குழந்தைகளால் மனதில் பாரமோ அல்லது கவலையோ ஏற்படகூடும். சிலருக்கு பணக்கஷ்டம் சிலருக்கு மனகஷ்டம். வாரத்தின் மத்தியில் நண்பர்களை சந்திக்கவும்.

பெண்கள் - வீட்டில் கணவருடன் மன வேற்றுமை, பிள்ளைகளால் ஏற்படும். கவலை வேண்டாம் அமைதியாக இருந்து சூழ்நிலைகளை கையாளவும். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து முடிவெடுக்கவும்.

உத்தியோகம் - வேலையிடத்தில் வார்த்தையில் கவனம் தேவை. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் பேசும். போது கவனம் தேவை. கோபம் வேண்டாம். வேலை மாற்றமோ, அல்லது இடமாற்றமோ இப்போது வேண்டாம்.

வியாபாரம் - தொழில் - இந்த வாரம் பணவருவாய் நன்றாக இருக்கும். இருந்த போதிலும் மனதில் பாரம் இருந்து கொண்டே இருக்கும். பங்கு வர்த்தகம் பயன் தரும். கூட்டுத் தொழில் திருப்தி தரும்.

பரிகாரம் - சனிக்கிழமை 8 எள் தீபம் சனீஸ்வரனுக்கு ஏற்றவும். ராகு - கேது பரிகார பூஜைசெய்யவும் குடும்ப ஒற்றுமைகாக.

கடகம் (புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயிலியம்)

இந்த ராசிகாரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம். மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். எந்த விதமான மனக் கவலையும் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். கடன் சுமை குறையும். பிள்ளைகளால் இருந்த மனகஷ்டம் நீங்கும். மருத்துவ செலவு குறையும். சிலருக்கு திருமண யோகம் உண்டு. சில பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். மனதில் மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும்.

வியாபாரம் - தொழில், தனித்தோ அல்லது கூட்டுத் தொழிலோ, இரண்டுமே லாபம் தரும். புதிதாக தொடங்கும் எண்ணம் இருந்தால் இந்தவாரம் புதன்கிழமைக்கு மேல் நன்றாக உள்ளது.

உத்தியோகம் - சிலருக்கு வேலை மாற்றம் உண்டு, சிலர் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எண்ணங்கள் நிறைவேறும். புது வேலை அல்லது செய்யும் வேலையில் திருப்பங்கள் ஏற்படுவது என நிகழ்வுகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

பரிகாரம் - வியாழனன்று தட்சணாமூர்த்திக்கு 3 நெய் தீபம் ஏற்றி அர்ச்சினை செய்யவும்.

சிங்கம் (மகம், பு+ரம், உத்தரம் 1ம் பாதம்)

இந்த வாரம் முழுவதுமே தங்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்கு தேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு. பெரியவர்களின் உடல் நலம் தேறும். ஆறுதலான வாரமாகும்.

பெண்கள் - குடும்பத்தில் நிம்மதி உண்டு. மருத்துவ செலவு குறையும். கணவன், மனைவி ஒற்றுமை உயரும் சிலருக்கு சுபநிகழ்வுகள் நடக்க வாய்ப்புண்டு. பெரியவர்களின் உடல் நலம் தேறும். வேலைவாய்ப்பு தேடும் பெண்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.

உத்தியோகம் - இந்த வாரம் நீங்கள் மிகவும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அலுவலகத்தில் வீண் வம்பு வழக்குகளை தவிர்க்கவும். வருவால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. கூடுமானவரையில் அலுவலகத்தில் மெளன விரதம் இருப்பது நல்லது.

தொழில் - வியாபாரம் - எந்த வேலையும் தாமதம் ஆகலாம். நல்லதொரு வாரம்தான் இருந்த போதிலும், முன் எச்சரிக்கை தேவை. தனி தொழில் மற்றும் கூட்டுத் தொழிலில் வாக்கு வாதம் வேண்டாம்.

பரிகாரம் - திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சினை செய்யவும் சனி அன்று பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சினை செய்யவும்.

கன்னி (உத்தரம் 2ம், 3ம், 4ம் பாதம், அத்தம், சித்திரை 1ம், 2ம் பாதம்)

இந்த வாரம் முழுவதும் அலைச்சல் அதிகம் இருக்கும் இருப்பினும் வருவாய் நன்றாக இருக்கும். புதிய நட்பு, ஸ்நேகம் நம்ப வேண்டாம். இவர்களால் மன உளைச்சல் ஏற்படலாம்.

பெண்கள் - குடும்ப ஒற்றுமை உண்டு. எங்கு சென்றாலும் உங்களுக்கு மனதில் குடும்பச் சூழ்நிலையே இருக்கும் நல்ல வாரமாக இந்த வாரம் அமையும். கூடப் பிறந்தவர்கள், அம்மா, அப்பா ஆகியோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

உத்தியோகம் - அலுவலகம் நிம்மதி தரும். புதிதாக உள்ள வேலை மனதிற்கு நிறைவை தரும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு பெரிய பலமாக இருப்பார்கள்.

தொழில், வியாபாரம் - கூட்டுத் தொழில், தனியார் இரண்டுமே நல்ல பலனைத்தரும். வருவாய் பற்று குறை இருக்காது. பங்கு வர்த்தகம் நன்றாக இருக்கும். பழைய கடன் வசூலிக்கப்படும். வெளிநாட்டு பிரயாணம் வெற்றியைத் தரும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும்.

பரிகாரம் - செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றவும்.

துலாம் (சித்திரை 3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம் பாதம்)

இந்த வாரம் தடைப்பட்டகாரியங்கள் இனிதே நடக்கும். கணவன், மனைவி குழந்தைகள் நலம் நன்றாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். சொத்து தகராறு முடிவுக்கு வரும். சகோதர சகோதரியிடையே சுமூகமான சூழ்நிலை பரவும்.

பெண்கள் - குடும்பம் மேன்மை அடையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்த உறவுகள் சேருவார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சிலருக்கு காதல், திருமணம் கைகூடும். பிறந்த வீட்டால் நன்மை ஏற்படும்.

வியாபாரம் - தொழில் - கவனம் வேண்டும். அக்கறையுடன் செயல்படுங்கள். வீண் விரயம் ஏற்படலாம். பங்கு வர்த்தகம் எச்சிரிக்கை தேவை. தொழிலில் புதியதாக எதுவும் வேண்டாம். கூட்டுத்தொழிலில் கவனம் வேண்டும்.

உத்தியோகம் - வேலையில் அக்கறை காட்டுங்கள். எவரையும் நம்ப வேண்டாம் புதிய நட்பில் கவனம் தேவை. வெளி இடங்களில் வாக்குவாதம் வேண்டாம்.

பரிகாரம் - சனி கிழமை அனுமனை வழிபடுங்கள்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை)

சந்தோஷமும், கவலையும் கலந்த வாரமாக இருக்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகை மனதிற்கு நிம்மதியை தரும். சிலருக்கு கடன் சுமை குறையும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டில் தடைப்பட்ட திருமணம் நடந்தோறும். சிலருக்கு காதல் வாழ்க்கையில் தோல்வி ஏற்படும்.

பெண்கள் - வீட்டில் அமைதி நிலவும். உறவினர்களின் வருகையால் சற்று சலசலப்பு ஏற்பட்டு பின்பு மறையும் கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வெளியில் செல்லும் போது கவனம் தேவை.

உத்தியோகம் - வேலை முயற்சி வெற்றி அடையும். வேலை தேடிகொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வேலை மாற்றம் எதிர்பார்த்தோருக்கு அதற்கான நல்ல காலநேரம் இது. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திருப்தியான வாரம். வருமானம் திருப்தி தரும்.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் சற்று சலசலப்பு இருக்கும். வருமானம் சற்று குறைவாக இருந்தாலும், மனதில் சந்தோஷம் இருக்கும் புது தொழில் இப்போது வேண்டாம்.

பரிகாரம் - விநாயகப் பெருமானை திங்கட்கிழமை அன்று 9 நெய் விளக்கேற்றி வணங்கவும்.

தனுசு (மூலம், பு+ராடம், உத்தராடம் 1ம் பாதம்)

இவர்களுக்கு இந்த வாரம் விருந்தினர்களின் வருகை வாரம் முழுவதுமே வேலை இருக்கும். எந்த விதமான மனசோர்வும் ஏற்படாது. நண்பர்கள் உதவுவார்கள். பொதுவாக இந்த வாரம் சிலர் வெளியூர் பிராயணம் மேற்கொள்வார்கள். தெய்வீக பணியில் சிலர் ஈடுபடுவார்கள்.

பெண்கள் - குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவர் உறுதுணையாக இருப்பார். வீட்டில் பெரியவர்களுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். வேலைக்கு போகும் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

வியாபாரம் - கூட்டுத்தொழில் விருத்தியாகும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு பிரயாணங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும். எண் ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகம் - வேலை பளு அதிகம் இருக்கும். எந்த வித மனசோர்வும் ஏற்படாது. வாக்கு வாதங்களை தவிர்க்கவும். வேலையில் மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளியூர்மாற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம் - விநாயகரை வழிபடுங்கள். செவ்வாய் அன்று விநாயகருக்கு அருக்கம்புல் அர்ச்சினை செய்யவும். குரு பகவானுக்கு வியாழனன்று அர்ச்சனை செய்யவும். கறுப்பு கொண்டைக் கடலை தானம் செய்யவும்.

மகரம் (உத்தராடம் 2ம், 3ம், 4ம், பாதம், திருவோணம், அவிட்டம் 1ம், 2ம் பாதம்)

இந்த ராசி நேயர்களுக்கு வாரத்தின் ஆரம்பத்தில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். பணப்புழக்கம் திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும் மருத்துவ செலவு குறையும்.

பெண்கள் - பிறந்த வீட்டால் பலன் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்காதீர்கள். நண்பர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவிட்ட நட்சத்திர பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருவோணம் இவர்களுக்கு பிறந்தவீட்டால் நன்மை ஏற்படும். உத்திராடம் இவர்களுக்கு சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

வியாபாரம் - கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. புதிய கடன் முயற்சி இப்போது வேண்டாம். விரிவாக்கம் ஒப்பந்தங்கள் வாரத்தின் இறுதியில் பயன் தரும். பங்கு வர்த்தகம் நன்றாக இருக்கும். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகம் - வெளியூர் பிரயாணம் நன்றாக இருக்கும். அரசு ஊழியர்களுக்கு வெகுமானம் உண்டு. வேலைமாற்றம் இப்போது வேண்டும். இடமாற்றம் முயற்சி செய்தால் திருப்தி அளிக்கும்.

பரிகாரம் - திங்கள் - புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி அர்ச்சினை செய்யவும். 9 பேருக்கு சனிக்கிழமை அன்னதானம் செய்யவும்.

கும்பம் (அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பு+ரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதம்)

இந்த வாரம் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு இருந்தாலும் மனதிற்குள் ஒரு தைரியம் இருக்கும். உறவினர்களின் வருகை மற்றும் திருமண வேலைகள் என்று இந்த வாரம் முழுவதும் உழைப்பு தான். வீட்டில் விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும். பொதுவாக இந்த வாரம் உங்களுக்கு சுறுசுறுப்பான வாரம் என்று சொல்லலாம்.

பெண்கள் - மனதிற்கு சுகமான வாரம். உடல் உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ணத்தினால் கண் நோய் வரலாம். எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தடைப்பட்ட வேலைகள் நடக்கும். குழந்தை பேறு இல்லாத சிலருக்கு நல்ல செய்தி வரும். பிறந்த வீட்டால் நன்மை உண்டு.

வியாபாரம் - எதிலும் முன்யோசனை வேண்டும். புது முயற்சிகள் இப்போது வேண்டாம். மனதில் சோர்வு ஏற்படலாம். தொழில் திருப்தி தரும். யாருக்கும் கடன் அளிக்க வேண்டாம். பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம் - வேலையில் கவனகுறைவு ஏற்படலாம். மனதில் சோர்வு வரும். நண்பர்கள் சக ஊழியர்களிடம் வார்த்தையில் எச்சரிக்கை தேவை. அரசு பணி புரிவோருக்கு பணி மாற்றம் ஏமாற்றத்தை தரும்.

பரிகாரம் - சனிக்கிழமை சிவனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றவும். சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றவும்.

மீனம் (பு+ரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி)

வெற்றி தரும் வாரமாக அமையும் இந்த ராசிகாரர்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டு. அண்ணன் தம்பி, அக்கா தங்கை, உறவுகள் மேம்பட்டு, பலப்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். சொத்து விவகாரங்கள் சுமூகமாக முடியும்.

பெண்கள் - இந்த வாரம் பிறந்த வீட்டால் பயன் உண்டு. கூடப்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். வீடு, வாகனம் மனை வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீடு மாற்றம் செய்வார்கள். சிலருக்கு பொன் பொருள் சேரும். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

வியாபாரம் - தொழில் சிறப்படையும். கடன் தொல்லை தீரும். பழைய பாக்கி வசூல் ஆகும். அரசு உதவி எதிர்பார்த்தோருக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். கூட்டு தொழில் சீராக அமையும். வெளிநாட்டு வாணிகம் பயன் தரும். வருமானம் கூடும்.

உத்தியோகம் - சிலருக்கு பணியில் அதிக வேலை இருக்கும் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு மாற்றம் எதிர்பார்த்த மாதிரி அமையும். அரசு வேலையில்இருப்பவர்கள் பணி மாற்றம். இடம் மாற்றம் அமையும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகத்தான செய்தி வரும். தொலைதூர தொடர்புகள் பயனளிக்கும்.

பரிகாரம் - புதன்கிழமை அன்று மகா விஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள். 5 தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்யவும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.