ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கான இலங்கைக்கான வதிவிடப்
பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 30ஆவது
கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
குறிப்பாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளின் வதிவிடப்
பிரதிநிதிகளை சந்தித்து எதிர்வரும் கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவு தேடுவது
தொடர்பில் பிரசாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக புதிதாக வெளிவிவகார
அதிகாரிகளும் ஜெனிவாவில் இலங்கை வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்துக்கு
வரவழைக்கப்பட்டுள்ளனர்.