பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள்
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் நேற்று மீண்டும்
பிரசன்னமாகியிருந்தனர்.
ரத்னாலங்கா நிறுவனம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த
விசாரணைகள் முன் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரிடம் 6 மணித்தியாலயம்
வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மீண்டும் எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை
ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய
ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்று முன்தினமும் கடந்த மாதம் 24 ஆம் திகதியும் அவரிடம் விசாரணை
மேற்கொள்ளப்பட்டிருந்தது.