தென் இலங்கையில் வெலிகம என்ற சிறுநகரமொன்று இருப்பதை நாமறிவோம். அந்தப்
பிராந்தியத்தில் தெனிப்பிட்டிய, மதுரப்புர என்ற இடத்தில் தமிழ் அறிவகம் என்ற
இல்லத்தில் இஸ்மாயில் எம். பைரூஸ் என்ற கல்விமான் “கலைமகன் பைரூஸ் என்ற பெயரில்
கவிதை உட்படப் பல எழுத்தாக் கங்களைத் தந்து கொண்டிருக்கிறார்.
கலைமகன் பைரூஸ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு “நிழலும் நிதர்சனமும்” என்ற பெயரில்
வெளியாகியது. அந்தக் கவிதை நூலுக்கு மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட மற்றொரு
இஸ்லாமியக் கல்விமான் ஆன கலைவாதி கலீல் ஒரு முன்னுரையை எழுதியிருந்தார்.
அதிலே, “கவிதையொன்றைப் படைப்பதற்கு மிக அவசியமான இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல்,
பொருள், யாப்பு, அணி போன்றவற்றை நன்கு கற்றுத் தெளிந்ததன் பின்னரே கலைமகன் கவிதை
படைத்துள்ளார் என்பதற்குச் சான்று கூறும் பல கவிதைகள் இத் தொகுப்பில்
காணப்படுகின்றன” எனக்கூறுகிறார்.
இது உண்மையே பைரூஸ் ஒரு பட்டதாரி. தமிழில் நன்கு பரிச்சயமான சொல்லேருழவர்.
இவர்கவிதைகள் தொடர்பாக வேறு சில சுவைஞர்களும் சான்றிதழ் வழங்கியுள்ளனர். திக்குவல்லை
ஷப்வான், ஸெய்யித் ஹ¥ஸன் மெளலானா ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
மர்ஹ¥ம் எம். எஸ். எம். ஷம்ஸ், எம். எஸ். பாஹிம், மானா மக்கீன், மர்ஹும் எம். ஏ.
ரஹ்மான், ஆகியோரும் இவர் வளர்ச்சியில் பங்கெடுத்தனர்.
இவர் இதழியலாளராகவும் அனுபவம் பெற்றிருக்கிறார். எஸ். எச். நிஃமத் நடத்திய “இடி”,
எம். பெளசர் நடத்திய “முஸ்லிம் குரல்”, “சுடர்ஒளி” ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து
போதிய அனுபவங்களைப் பெற்ற கலைமகன் பைரூஸ், தாமே ‘புத்தொலி’ என்று மாத சஞ்சிகையை
நடத்தவும் முற்பட்டார்.
இவர் ஏன் கவிதைகளை எழுது கிறார் என்று அறிய முற்பட்டால், அவரே கூறுகிறார்.
“சமூதாயத்தில் பல அவஸ்தை களுக்கு நான் உள்ளாகியிருக்கின்றேன். அப்போதெல்லாம்
ஆத்திரத்தைப் பிய்த்துக் கொண்டு எனக்குள் கவிதைகள் பிரசவமாகின்றன; ஏதேனும் ஒரு
அவலத்தை நேரடியாகக் காணும்போது கவிதை எனையறி யாமலே பிய்த்துக் கொண்டு வருகின்றது.
நானெழுதும் கவிதை களுக்கு நானே முதல் வாசகனாகி பலமுறை படித்து சுவையாயின் மாத்திரமே
பத்திரிகைகளுக்கு அனுப்புவேன்”.