Hutch நிறுவனம் அதன் விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அங்கமாக தனது 3மி
வசதியை யாழ் குடாநாட்டுக்கும் வழங்கவுள்ளது. இம்மாதம் முதல் யாழ் குடாநாட்டு மக்கள்
Hutch 3மி வசதியைப் பெறவுள்ளனர். இதன் மூலம் யாழ் குடா மக்கள் தங்கு தடையற்ற
இன்டர்நெட் வசதியைப் பெற வழியேற்பட்டுள்ளது.
நாடெங்கும் நிறுவப்படும் 1300 கோபுரங்களின் மூலம் நாடளாவிய ரீதியில் Hutch 3மி
வசதியை வழங்கும் நடவடிக்கைகளின் ஒருபடியாகவே யாழ்குடா நாட்டுக்கான சேவை
விஸ்தரிக்கப்படுகிறது. ஷிசீart ஜிhonலீ அல்லது ளிonglலீ களைப் பாவிப்பதன் மூலம் யாழ்
குடாநாட்டின் எந்தவொரு பகுதியிலுமுள்ள மக்கள். தடையற்ற விசேட 3மி வசதியைப்
பெறக்கூடியதாக இருக்கும்.
யாழ்ப்பாணத்திற்கு Hutch 3மிவசதி விஸ்தரிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு
விரிவாக்கல் நடவடிக்கைகளை Hutch நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. யாழ் குடா நாட்டில்
குறிப்பிட்ட 6 இடங்களில் அமைக்கப்படும் Hutch kiosk எனப்படும் விசேட காட்சிக்
கூடங்களுக்கு விஜயம் செய்து. பாவனையாளர்கள் Hutch 3மி வசதியை நேரடியாகவே
அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாவனையாளர்கள் இந்த
காட்சிக்கூடங்களுக்குச் சென்று Hutch 3மி மூலம் தங்கு தடையற்ற இணைய வசதி அனுபவத்தை
முற்றிலும் இலவசமாகப் பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வலம்வரவுள்ள செம்மஞ்சள் நிற
Hutch 3மி மோட்டார் சைக்கிள் தொடரணியில் எத்தனை மோட்டார் சைக்கிள்களை
இனங்கண்டீர்கள் என்பதைத் தெரிவித்துப் பரிசுப் பொதிகளை வெல்லும் வாய்ப்பும்
கிடைக்கவுள்ளது. வானொலிமூலம் அறிவிக்கப்படும். தொலைபேசி இலக்கத்திற்கு ஷிணிஷி
செய்வதன்மூலம் அதிர்ஷ்டசாலிகள் பெறுமதி மிக்க பரிசுப் பொதிகளை வெல்லலாம்.