இலங்கை பிளியட் மற்றும் ஸ்னூகர் சங்கம் ஏற்பாடு செய்யும் 61வது தேசிய பிளியட்
போட்டித் தொடர் இவ்வாண்டு மிக சிறப்பாக நடாத்த தீர்மானிக் கப்பட்டுள்ளது.
இதற்கான அனுசரணையினை வழங்க இம்முறை சிங்கர் லங்கா நிறுவனம் முன் வந்துள்ளமை குறித்து
பெறுமையடைவதாக சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சபீக் ரஜாப்தீன்
குறிப்பிட்டார்.
இப்போட்டித் தொடர் கடந்த மாதம், முதல் கொழும்பு, காலி, கண்டி மற்றும் நுவரெலியா
ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. கொழும்பில் 51 வீரர்களும் கண்டியில் 11ம் காலி
மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் முறையே 12 மற்றும் 11 போட்டியாளர்களும் இதில்
கலந்து சிறப்பித்தனர். இதன் மூலம் மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 35
போட்டியாளர்க ளுக்கான தொடர் 17.8.2013ம் முதல் 23.8.2013 வரை நடைபெற்று 16 பேர்கள்
தெரிவாகியுள்ளனர்.
இறுதிப் போட்டி இம்மாதம் நொக் அவுட் முறையில் முடிவுபெறும். வெற்றியாளர்களுக்கு
செம்பியன் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என சங்கம் தெரிவிக்கின்றது.
இதன் திகதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படுவதாக சங்கம் மேலும் கூறுகின்றது.