ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்

லொறி குடை சாய்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு; ஒன்பது பேர் காயம்

பண்டாரகம-பிலியந்தலை வீதியில் அதிகாலையில் சம்பவம்

பண்டாரகம- பிலியந்தலை வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இவ ர்கள் பயணித்த லொறி குடை சாய்ந்ததில் இவர்கள் இருவரும் இறந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். லொறி சாரதிக்குச் சொந்தமான வயலில் இருந்து நெல் அறுவடை செய்து எடுத்து வருகையிலே விபத்து சம்பவித்துள்ளது.

12 1/2 அடி நீளமான கென்டர் ரக லொறியே இவ்வாறு விபத்துக்குள் ளானதோடு ஆறுபேர் லொறியின் பின்பக்கத்தில் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். இறந்த இருவரும் காயமடைந்தவர்களும் லொறி சாரதியின் வேலைத்தளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து இதெல்பிடிய சந்தியில் நேற்று அதிகாலை 1.00 மணிக்கு இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி