ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 01
நந்தன வருடம் தை மாதம் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY, 12, 2013
வரு. 81 இல. 37
 

தென்றல் வருடிச்சென்ற அந்திப்பொழுது

தென்றல் வருடிச்சென்ற அந்திப்பொழுது

அலைபோல் மீண்டெழும்
அற்புத நினைவுகளோடு
வருடிச்செல்கிறதே தென்றலின் வீச்சு
ஒரு குழந்தை மாதிரி.

வசந்தத்தின் மலர்களாய்
மனவெளிகளில் பு+த்துக்கிடக்கும்
அழகின் வடிவங்களை
அடிக்கடி நினைக்கிறது மனசு.

கனாக்கொள்ளும் பருவங்கள்
காலத்தின் வீதிகளில்
அயராமல் நடக்கிறது
இளமையோடு கைகோர்த்து.

மனசின் எச்சங்களை அழுத்தித்துடைத்து
தூய்மையின் அழகை
ஆழமாய் பதிக்கிறது
இனிய நினைவுகளின் அற்புதக்கரங்கள்.

நிலாக்கால இரவுகளிலும்
கருமை கொண்ட பொழுதுகளிலும்
மனசில் வீசும் தென்றலின் வாசம்
வாழ்வின் வனப்புகளை
வசிகரிக்கச் செய்கின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி