அறிவு செல்வம் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதை பெற முயலவேண்டியது நம்
கடமை. உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
இறைவனை முன்னே வை. பின்னே யார் வருகிறார்கள் என்ற கவலை உனக்கு வேண்டியதில்லை.
பண்பாடற்ற மனிதன் பிறரை குறை குருவான்!
பகுதி பண்பட்டவன் தன்னை தானே குறை குறிக் கொள்வான்.
முழுக்க பண்பட்டவன் யாரையும் குறை கூற மாட்டான்.
உன் முதல் எதிரி உன்னுடைய மனம். அதை முதலில் அடக்கு வெற்றி நிச்சயம்.
பிறர் உணர்வுக்கு மதிப்பு கொடு. பிறகு பார்! உனக்கு கிடைக்கும் மதிப்பைகண்டு நீயே
வியப்படைவாய்.
நண்பர்களை பற்றி நல்லது பேசு. விரோதியை பற்றி ஒன்றும் பேசாதே.
வெற்றியின் ரகசியங்கள்:
உன் எண்ணத்தை மாற்று
உன் நம்பிக்கை மாறும்!
உன் நம்பிக்கையை மாற்று
உன் எதிர்பார்ப்பு மாறும்!
உன் எதிர்பார்ப்பை மாற்று
உன் மனப்பான்மை மாறும்!
உன் மனப்பான்மையை மாற்று
உன் நடவடிக்கை மாறும்!
உன் நடவடிக்கையை மாற்று
உன் செயல்திறன் மாறும்!
உன் செயல்திறனை மாற்று
உன் வாழ்க்கை மாறும்
பெறத் துன்பப்படு! காக்க கவனமெடு! இழக்க அச்சப்படு!
துன்பத்தில் இருந்து மீள சிறந்தவழி அதற்குள் புகுந்து வெளியேறுவதுதான்.
உன்னுள் இருக்கும் உன்னை விழிப்புற செய்!
சிஷ்யன் தயாரானால் குரு தோன்றுவார்.
செல்வத்திற்கு பின்வறுமை வருவதை காட்டிலும்
வறுமைக்கு பின் செல்வம் வருவது மேல்!
முட்டாள் மேலும் தேடிக் கொண்டிருக்கட்டும்
நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி!
உழைக்கிறவனுக்கு ஒரு பிசாசு ஆசை காட்டுகிறது!
சோம்பேறிக்கு ஆயிரம் பிசாசுகள் ஆசை காட்டுகின்றன!
முயற்சியின் பகை
1. சோம்பல்
2. மனத்தளர்ச்சி
3. திறனில் நம்பிக்கையின்மை
4. பொறுமையின்மை
5. தீர்மானமின்மை
6. ஆழமற்ற தன்மை.
தகுதி உள்ளவரைதான் உலகம் உன்னை மதிக்கும்!
வாழ்க்கை மரிபோருளாக இருக்கிறது. அதனால்தான் அழகாகவும் இருக்கிறது!!