யெமனில் ஆயுதக் குழுவுடனான மோதலில் 6 இராணுவ வீரர்கள் பலி
யெமனில் ஆயுதக் குழுவுடனான மோதலில்
6 இராணுவ வீரர்கள் பலி
அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள யெமனின்
இன்ஜியார் நகரில் இடம்பெற்ற மோதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 6 இராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யெமனில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையின்
யெமனின் தெற்கு நகரான இன்ஜிபாரின் கட்டுப்பாட்டை அன்சார் அல் ஷிரியா என்ற அமைப்பு
தன்வசம் வைத்துள்ளது. இந்த அமைப்பு அல்கொய்தாவுடன் தொடர்புபட்டது என
தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்ஜிபார் பகுதியில்
யெமன் இராணுவத்துக்கும் ஆயுதக் குழுவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் 6
இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு 8 பேர் காயமடைந்ததாக யெமன் அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே 29ஆம் திகதி முதல் இன்ஜிபார் பகுதி இந்த ஆயுதக்குழுவின்
கட்டுப்பாட்டிலுள்ளது. இங்கு இடம்பெற்ற மோதல்களில் 90 இராணுவ வீரர்கள்
கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.