அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடும் பராக் ஒபாமா பேஸ்புக்,
டுவிட்டர் இணையத்தளம் மூலம் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் போட்யிட
பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கிடைத்த வெற்றியை போல் மீண்டும் வெற்றிபெற
தனது பிரசாரத்தை சமூக இணையதளங்கலான பேஸ்புக், டுவிட்டர் மூலம் ஆரம்பித்துள்ளார்.
டுவிட்டர் இணையத்தளத்தில் அவர் இனிமேல் தொடர்ந்து கருத்துக்களை கூறப்போவதாக
கூறியுள்ளார்.
இதேபோல் பேஸ்புக்கிலும் கூறியுள்ளார்.
இதற்கு 23000 பேர் வரவேற்றுள்ளனர். பேஸ்புக்கில் 4,000 பேர் தங்களது கருத்தை
கூறியுள்ளனர்.