ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

கையடக்கத் தொலைபேசிp பாவனையாளர்களே!

கையடக்கத் தொலைபேசிp பாவனையாளர்களே!

கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களே... நீங்கள் கையடக்கத் தொலைபேசியினை உங்களது இடுப்புப் பட்டியில் belt அணிகின்aர்களா?

.....ஆம் எனில், இது உங்களுக்கான செய்தி...

துருக்கி, இஸ்பாட்டா சுலைமான் டெமிரெல் பல்கலைக்கழகத்தினை சேர்ந்த மருத்துவர் Tolga Atay மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு நீண்ட கால ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்புகள் பலவீனமாவதாக கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள், கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்ற 150 பாவனையாளர்களின் இடுப்பிலுள்ள எலும்புக் கூட்டின் குழிவிடங்களின் (iliac wings) மேலுள்ள விளிம்புகளின் என்பு நெருக்கத்தினை அளவிட்டனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த அளவீட்டுக்காக இரட்டை x-ray absorptiometry  தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தினர்.

அதே சமயம் ஒஸ்டியோபோரோஸிஸ் மற்றும் என்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் என்பு நெருக்கத்தை அறிய இந்த பரிசோதனையே மேற்கொள்ளப்படுகின்றது.

என்பு நெருக்கமானது, எந்தப் பக்கத்தில் கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றார்கள் (வயது பக்கம் 122 பேரும், இடது பக்கம் 28 பேரும் அணிந்தவர்களிடையே) என்பதற்கு  m  மறுதலையாக எதிர்ப்பக்கமானது ஒப்பிடப்பட்டது. ஒருவர் ஒருநாளில் சராசரியாக 15 மணித்தியாயங்கள் தனது கையடக்கத் தொலைபேசியினை இடுப்புப் பட்டியில் அணிகின்றார். அத்துடன் சராசரியாக 6 வருடங்கள் கையடக்கத் தொலைபேசியினை உபயோகிக்கின்றார்.

ஆய்வின் பிரகாரம், எந்தப் பக்கத்தில் தனது கையடக்கத் தொலைபேசியினை அணிகின்றாரோ அந்தப் பக்க இடுப்புக் கூடு என்பு நெருக்கங்களில் ஒரு சிறிதளவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

வித்தியாசமானது புள்ளிவிவர அடிப்படையில் முக்கியமற்றதாகும், இந்த அணுகுமுறையில் ஒஸ்டியோபோரோஸிஸ்சில் வீழ்ச்சிகளைக் காண முடியவில்லை.

ஆய்வின் பிரகாரம், கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்சார காந்த அலைகளினால் என்பு நெருக்கங்கள் மோசமாகப் பாதிப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக கண்டறிந்துள்ளனர்.

என்புகளில் இடுப்புக்கூடு என்புகளானது என்புப் பொருத்துகளில் பெருமளவில் பயன்படுத்தும் மூலமாகும். ஆகவே என்பு நெருக்கங்களில் ஏதாவது குறைவு ஏற்படும் போது மீளாக்கபூர்வ சத்திரசிகிச்சைகள் விசேடமாக முக்கியமாகும்.

எவ்வாறாயினும் ஆராய்ச்சியாளர்கள் தமது கண்டறிதல்கள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்கள்.

அதேவேளை  Atay  அவரது குழுவினர் :

எமது நாளாந்த வாழ்க்கையில் கையடக்கத் தொலைபேசியினை சாத்தியமானளவு எமது உடம்புகளிலிருந்து தூர விலகி வைப்பது சிறந்ததாகும்’ என்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி