மொரோக்கோ மன்னரின் அரசியல் சீர்திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மொரோக்கோ மன்னரின் அரசியல்
சீர்திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மொரோக்கோ மன்னர் 6 ஆவது முஹம்மத் அறிவித்துள்ள அரசியல் சீர்திருத்த முடிவுகள்
போதுமானதாக இல்லை என கோரி தலைநகரான பாட்டில் 10,000க்கும் மேற்பட்டோர் நேற்று
முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொரோக்கோவில் கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக அரச பரம்பரை ஆட்சி இடம்பெற்று வருகிறது.
இதற்கு எதிராக மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
ஆட்சியிலுள்ள மன்னர் முஹம்மத் புதிய அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து
அறிவித்துள்ளார்.
எனினும் புதிய சீர்திருத்தத் தின்படி நாட்டின் பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும்
சமய விவகாரங்கள் மன்னரின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என அறிவிக்கப்பட்டு
ள்ளது. இந்நிலையில் மன்னரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு கிளப்பியுள்ளது. மொரோக்கோ
சட்ட யாப்பு ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட குழு ஒன்றின் மூலமே மாற்றப்பட வேண்டும்
என எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.