மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தாடையில் லேசான எலும்பு முறிவு
ஏற்பட்டுள்ளதாக இந்திய அணியின் மேலாளர் அர்ஷத் அயூப் தெரிவித்தார். இந்த டெஸ்டில்
டிராவிட் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார். டாக்டர்களிடம்
ஆலோசித்த பின்பே டிராவிட் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
கையில் லேசான காயம் அடைந்துள்ள யுவராஜ் சிங் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
காயம் தொடர்பான அறிக்கை கிடைத்த பின் செவ்வாய்க்கிழமை யுவராஜ் குறித்தும் முடிவு
செய்யப்படும் என்றார் அர்ஷத் அயூப்.