வரு. 78 இல. 3

ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

TUESDAY, JANUARY 05, 2010

அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: ஆயிரம் பேர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில் வெள்ளம்: ஆயிரம் பேர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில் பெய்த கடும் மழையால் ஆறுகள் குளங்கள் உடைப்பு எடுக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்ற ப்பட்டனர். அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் இந்த வெள்ளம் ஏற்பட்டது.

தென்கிழக்கு மாகாணத்திலுள்ள கூனெபிள், செளத்வேல்ஸ் ஆகிய இடங்களிலிருந்து மக்கள் வெளியேற் றப்பட்டனர். இங்குள்ள ஆறுகள், குளங்கள் உடைப்பெடுக்கும் நிலை ஏற்பட்டதால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். திங்கட்கிழமை காலை ஐந்து மீற்றர் உயரத்திற்கு வெள்ளம் காணப்பட்டது.

இதனால் வீடுகளை விட்டு நாங்கள் வெளியே ற்றப்பட்டோம் என மக்கள் தெரிவித்தனர். பாரிய வெள்ளத்தால் சில நகரங்களுடனான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டன. கடும் மழையுடன் கடும் காற்றும் வீசியதால் பெரும் சேதங்கள் ஏற்படலாம் என அஞ்சப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •