வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

ஹொண்டுராஸில் அவசரகாலச் சட்டம் நீக்கம்

ஹொண்டுராஸில் அவசரகாலச் சட்டம் நீக்கம்

ஹொண்டுராஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச்சட்டத்தை நீக்க அந்நாட் டின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மைகலெற்றி முன்வந் துள்ளார். மக்கள் மீது விதிக்கப் பட்டுள்ள தடைகளை நீக்கவுள் ளோம். வானொலி நிலையங்கள் மீண்டும் இயங்கவுள்ளன.

இவ்வாறு மைகலெற்றி குறிப்பிட்டார். ஹொண்டுராஸின் முன்னாள் ஜனாதிபதி மானுவல் ஷெலாயா நாடு திரும்பிய பின்னர் அங்கு அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இடைக்கால அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரென மானுவல் ஷெலாயா அறிவித்ததையடுத்து அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

நாடு திரும்பிய மானுவல் ஷெலாயா இன்னும் பிரேஸில் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •