அணுகுண்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈரான் போதிய திறன் பெற்றுவிட்டதாக ஐக்கிய
நாடுகள் சபை யின் அணுகுண்டு கண்காணிப்புப் பிரிவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் அணுகுண்டு தயாரிப்பதில் பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் உதவி
செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணுகுண்டு தொழில்நுட்பத்தை ஈரான் அதன் நட்பு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு,
தற்போது தனது தேவைக்கு ஏற்ப அத்தொழில் நுட்ப த்தைப் பயன்படுத்தி வருவதாக சர் வதேச
அணுசக்தி முகாமை தகவல் களை மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகி ஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ கியூ கான் மூலம் அணுகுண்டு
வடிவமை ப்பு தொழில்நுட்பங்களை ஈரான் பெற்றுக்கொண்டுள்ளது.
மேலும் யுரேனியத்தைச் செறிவூட்டு வதற்கான இயந்திரங்களையும் அவர் ஈரானுக்கு விற்பனை
செய்துள்ளதாகப் பல்வேறு உளவுத்துறை நிறுவனங்க ளும் தெரிவித்துள்ளன.
மேற்கண்ட தகவல்களை ஈரான் சென்று வந்த ரஷ்ய அணு ஆயுத விஞ்ஞானியும்
உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே அணுகுண்டு தயா ரிப்புத் தொடர்பா ஈரான் போது மான திறனைப்
பெற்றுவிட்டதாகவும், தாற்காலிகமாக இராணுவ தேவை க்கு மட்டும் தயாரிப்புப் பணியில் ஈடு
பட்டுள்ளதாகவும், அணு குண்டு தயா ரிப்புப் பணியில் முழுமையாக ஈடு படவில்லை எனவும்
அங்கிருந்து கிடை த்த உளவுத்துறை தகவல்கள் தெரி விக்கின்றன.
ஈரான் 2003ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறமையைப் பெற்றுவிட்டதாக இரண்டு
ஆண்டு களுக்கு முன்னரே, அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி செய்திகள்
வெளியாயின.