ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,23, 2010
கென்யாவில் பஸ்ஸ¤க்குள் குண்டு வெடித்து இருவர் பலி
கென்யாவில் பஸ்ஸ¤க்குள்
குண்டு வெடித்து இருவர் பலி
ஆபிரிக்காவில் உள்ள கென்யா நாட்டின் தலைநகரான நைரோ பியில் இருந்து ஒரு பஸ் உகாண்டா
நாட்டின் தலைநகரான கம்பாலா வுக்கு புறப்பட்டது.
2 பேர் ஒரு பையை பஸ்சில் ஏற்ற முயன்றனர். அப்போது அந்த பையில் இருந்த குண்டு
வெடித்த தில் அந்த 2 பேரில் ஒருவர் பலி யானார்.
பஸ்சில் இருந்த பயணிகள் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வர்களில் ஒருவர் பலியானார். இத னால் சாவு எண்ணிக்கை
2 ஆக உயர்ந்தது. தலைநகர் கம்பாலாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள்
தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து இரு
ந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பவர்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை
கென்யா கேட்டு உள்ளது.
இதற்கிடையில் பஸ் நிலையம் அருகே 2 பொதிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை பொலி ஸார்
சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.