காலியில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 -0 என இலங்கை முன்னிலை
வகிக்கிறது.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இப்போட்டியில் இரட்டைச் சதம் (221) அடித்த இலங்கையின்
முதல் நிலை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார ஐ.சீ.சீ. யின் டெஸ்ட் துடுப்பாட்ட
தரப்படுத்தலில் முதல் இடத்திற்கு உயர்த்தப்பட்டார். முதல் இரு இடங்களில் இருந்த தென்
ஆபிரிக்க வீரர்களான ஏ.பீ.டிவிலியர்ஸ் மற்றும் அஷிம் அம்லா ஆகியோர் முறையே 2ஆம்,
3ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டனர். அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்
அன்ஜலோ மெத்தியூஸ் முதன் முதலாக டெஸ்ட் தரப்படுத்தலில் 5வது இடத்திற்கு
முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் குமார் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் உலகின் அதிக இரட்டைச் சதம் பெற்றவர்கள்
வரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
உலகில் டெஸ்ட்டில் அதிகூடிய இரட்டைச் சதம் பெற்ற வீரர்கள் பட்டியல்