கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் முதலாம்
இடத்தினை சுவீகரித்து தேசிய போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாண விளையாட் டுத்துறை அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக் களமும்
இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தப் போட்டி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள் மடம் மகா
வித்தியாலய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் பிரதேச மற்றும் மாவட்ட போட்டிகளில்
வெற்றிபெற்று தெரிவுசெய்யப்பட்ட கராத்தே வீரர்கள் இந்த மாகாண விளையாட்டுப்
போட்டியில் கலந்துகொண்டனர்.
இதன்போது இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்
முதலாம் இடத்தினை மட்டக்களப்பு மாவட்டமும் இரண்டாம் இடத்தினை அம்பாறை மாவட்டமும்
மூன்றாம் இடத்தினை திருகோணமலை மாவட்டமும் பெற்றுக்கொண்டன.