தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற தீபாவளி பண்டிகை முற்பணத்தினை 6500
ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிலாளர் தேசிய சங்கம் பெருந்தோட்டக் கம்பனி களிடமும்
தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்
திற்கான சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங் பொன்னையா, 22
பெருந்தோட்டக் கம் பனிகளுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கடிதங்களை
அனுப்பி வைத்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது 4500 ரூபா மாத்திரம் தீபாவளி பண்டிகை முற்பணமாக
வழங்கப்படுகின்றது. எனினும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில்
இந்தத் தொகை எவ்விதத்திலும் போதுமானதாக வில்லை. எனவே இந்தத் தீபாவளி பண்டிகை
முற்பணத்தினை 6500 ரூபாவாக அதிகரிககும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும்
நன்மையடைவர்.
எனவே இவ்வருடம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவுள்ள தோட்டத் தொழிலாளர்களின்
நன்மைக்கருதி 6500 ரூபாவை தீபாவளி பண்டிகை முற்பணமாக வழங்குவதற்கு தோட்டக்
கம்பனிகளும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டுமென மத்திய மாகாணசபை
உறுப்பினர் சிங்பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.