நவராத்திரியின் ஆறாம் நாளாகிய இன்று ஞாயிறு (21) சரஸ்வதி பூஜை ஆரம்பமாகிறது.
இல்லங்களிலும், பாடசாலைகளிலும் விசேடமாக கல்விக் கதிபதியாம் சரஸ் வதிதேவிக்கு பூஜை
வழிபாடு நடைபெறு கிறது. கடந்த 16ம் திகதி ஆரம்பமான கணிப்பின்படியான மாற்றத்தினால்
இம்முறை எட்டுத் தினங்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள்
துர்க்கைக்கும், அடுத்த மூன்று தினங்கள் லக்ஷ்மிக்கும், கடைசி மூன்று தினங்கள்
சரஸ்வதிக்குமாக ஒன்பது இரவுகள் பகிரப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒன்பதாம் நாளாகிய 24ம் திகதி புதன் கிழமை விஜய தசமியன்று வாழைவெட்டு விழா
மற்றும் ஏடு தொடங்கல் வைபவங்களும் நடைபெறும். இத்தினத்தன்றே வர்த்தக நிறுவனங்களில்
ஆயுத பூஜை நடைபெறும் லேக் ஹவுஸ் இந்து மன்றம் ஏற்பாடு செய்துள்ள சரஸ்வதி பூஜை 23ம்
திகதி செவ்வாய்க்கிழமை லேக்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.