உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில் 13ஆவது மக்கா மாநாடு
உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில்
13ஆவது மக்கா மாநாடு
(மக்காவிலிருந்து எப்.எம். பைரூஸ்)
மக்கா முகர்ரமா 13ஆவது மக்கா மாநாடு நேற்று உலக முஸ்லிம் லீக் தலைமையகத்தில்
ஆரம்பமானது. மாநாடு இன்றும் நடைபெறும். இந்த மாநாட்டில் இலங்கையின் விசேட
பிரதிநிதியாக ஹஜ்ஜுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி கலந்து கொண்டார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை கவுன்ஸிலர் டாக்டர். உதுமா லெப்பையும் உடன்
பங்கேற்றார்.
மக்காவின் ஆளுநர் இளவரசர் காலித் அல் பைசர் இங்கு விசேட உரையாற் றியதுடன் சவூதி
மன்னரின் செய்தி யையும் வாசித்தார். உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் அப்துல்லா
பின் அப்துல் முஹ்ஸின் அல்துர்க்கியும் அங்கு உரையாற்றினார்.
இதேவேளை, மக்காவிலிருந்து தினகரன் வாரமஞ்சரிக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பெளசி,
தான் இன்று மதீனா செல்வ தாகவும் ஹாஜிகளின் நலனைக் கவனித்து வருவதாகவும்
குறிப்பிட்டார்.
இலங்கை ஹாஜிகளின் வசதி தொடர்பில் மக்காவிலிருக்கும் இலங்கைக் குழு அதிக கரிசணை
கொண்டுள்ளதாகத் தெரிவித்த பெளசி, காலநிலை சீராகவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும், ஜனாதிபதிக்காகவும் இலங்கை ஹாஜிகள்
பிரார்த்தனை புரிவதாகவும் அவர் தெரிவித்தார்.