ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

டிஜpட்டல் இந்தியா திட்டத்தால் 5 கோடி பேருக்கு வேலை

டிஜpட்டல் இந்தியா திட்டத்தால் 5 கோடி பேருக்கு வேலை

டிஜpட்டல் இந்தியா திட்டம் மூலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவர் தனியார் பாடசாலை நிகழ் ச்சி ஒன்றில் மேலும் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறை 30 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. அறிவுசார் பொருளா தார நாடாக மாற்றும் நோக்கில் 'டிஜpட்டல் இந்தியா' திட்டம் அறி முகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத் தின் கீழ் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. மக் கள் மிகச் சுலபமாக தொழில்நுட்ப அடிப்படை கட்டமைப்பு மற்றும் அரசு சேவைகளை பெற வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். குக்கிரா மங்களிலும் கணினி, தொலை தொட ர்பு வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்புகள் பெருகும். இந்தி யாவில் முதலீடு செய்ய நான்காயி ரம் பேர் முன்வந்துள்ளனர். அவர்க ளில் அமெரிக்காவின் தகவல் தொழில் நுட்ப நகரமான சிலிக்கான் வேலியை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

அவர்கள் உருவாக்கும் செயல் திட்டங்களால் வெளிநாட்டு நிறுவன ங்கள் கொழிக்கின்றன. அவர் கள் பேஸ்புக், கூகுள் போன்ற கண்டு பிடிப் புகளை இந்தியாவில் உருவா க்க துணை புரிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி