ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

நின்று போன பேச்சு மீண்டும் தொடக்கம்

நின்று போன பேச்சு மீண்டும் தொடக்கம்

வெளியுறவுத்துறை செயலர் nஜய்சங்கர் பாக். விஜயம்

பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தும் வகையில் நாட்டின் வெளியுறவு துறை செயலாளராக பொறுப்பேற் றுள்ள nஜய்சங்கர் விரைவில் அந்நாட்டுக்கு செல்கிறார். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஹரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களை சந்திக்க பாகிஸ்தான் தூதர் சம்மதித்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நின்று போனது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியுறவுத் துறை செயலாளர் nஜய்சங்கரை தொடர்பு கொண்ட பாகிஸ் தான் தூதர் பாசித் நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த சு+ழலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் n'ரிப்பை தொலைபேசி மூலம் நேற்று தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, உலக கோப்பையை அந்நாடு கைப்பற்ற வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையேயான உறவில் இது புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் விதமாக வெளியுறவு செயலாளர் nஜய்சங்கர் அந்நாட் டுக்கு செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் எப்போது பாகிஸ்தான் செல்வார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி