ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடு த்த அதிமுகவினர்
நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 322
வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்ப திவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அனைத்து
வாக்குச் சாவடிகளிலும் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படடிருந்தனர்.
தேர்தல்
வாக்குப்பதிவைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு பார்வையாளர்களும்
நியமிக்கப்படடிருந்தனர். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பெருக மணி
பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக பொலிஸாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்
காக ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நான்கு அதிமுக வினர் கைது செய்யப்பட்ட னர்.
அவர்களிடம் இருந்து பணம் பறி முதல் செய்யப்பட் டது.