இஸ்ரேலின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை நடான்ஸ் அணு செறிவு+ட்டல் தளத்திற்கு அருகில்
வைத்து சுட்டுவீழ்த்தியதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் டெஹ்ரானில் இருந்து தெற்காக 300 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் பகுதியை
நெருங்கிய ஆளில்ல விமானத்தின் மீது ஏவுகணை மூலம் தாக்கிய தாக ஈரான் புரட்சிப்படை
அறிவித்தது.
எனினும் வெளிநாட்டு அறிவிப்புகளுக்கு தம்மால் கருத்து வெளியிட முடியாது என்று
இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
"ராடாரில் சிக்கிக்கொள்ளாமல் திருட்டுத்தனமாக நுழைந்த சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம்
நடான்ஸ் பகுதியில் இருக்கும் அணுத்தளத்திற்குள் ஊடுருவ முயற்சித்தது. எனி னும்
குறித்த பகுதிக்குள் நுழைவதற்கு முன்னர் அதனை சுட்டுவீழ்த்த முடியுமானது" என்று
ஈரான் புரட்சிப்படை குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் அணுத்திட்டம் குறித்து சர்வதேச சக்திகள் பல சுற்று பேச்சு வார்த்தைகளை
நடத்திவருகின் றன. தமது அணு செயற் பாடு அமைதி யான நோக் கம் கொண் டது என்று ஈரான்
வலியு றுத்தியபோதும் இஸ்ரேல் உட்பட மேற்குலக நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க
முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றன.
ஈரான் அணுத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் கடந்த காலங்களில்
தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்தது.