ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

ரக்பி போட்டியில் திறமைகாட்டிய மாணவர்களுக்கு பாராட்டு

ரக்பி போட்டியில் திறமைகாட்டிய மாணவர்களுக்கு பாராட்டு

அக்கரைப்பற்று கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்- ஹம்றா மகா வித்தியாலயத்தில் சென்ற வருடம் றக்பி விளையாட்டில் திறமை காட்டிய மாணவர்கள் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது பாராட்டி பரிசளிக்கப்பட்டனர்.

விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஏ. எஸ். சாதீக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம். சரீப்தீன் பிரதம அதிதியாகவும் ஒலுவில் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளர் எஸ். எம். எம். ஹரீஸ் கெளரவ அதிதியாகவும் பிரதி அதிபர் எம். எஸ். எம். இஸ்மாயில், உதவி அதிபர் எஸ். ஆதம்பாவா ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். இதன் போது சென்ற வருடம் றக்பி போட்டிகளில் திறமை காட்டிய மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி