ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

உள்ளூர் போட்டியில் திறமையை வெளிக்காட்டினால் அணியில் இடம் கிடைக்கும்

உள்ளூர் போட்டியில் திறமையை வெளிக்காட்டினால் அணியில் இடம் கிடைக்கும்

“அணித் தேர்வு குறித்து கவலைப்படாமல் உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், மீண்டும் இந்தியாவுக்காக விளையாடலாம்” என இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா 27 இதுவரை 24 டெஸ்ட் (113 விக்கெட்), 18 ஒருநாள் (21 விக்கெட்), 6 சர்வதேச ‘டுவென்டி-20’ (10 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். தனது 22வது டெஸ்டில் 100வது விக்கெட்டை கைப்பற்றிய பிரக்யான் ஓஜா, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் விளையாடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணியிலும் இடம்பெறவில்லை.

இது குறித்து பிரக்யான் ஓஜா கூறியது: தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைக்காதது நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படாதது உள்ளிட்டவை குறித்து சிந்திக்கும் பட்சத்தில் மனதளவில் நெருக்கடி உண்டாகும். அணித் தேர்வு என்பது எனது கையில் இல்லை இது தேர்வுக் குழுவினரை சார்ந்தது.

இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பேன். வாய்ப்பு கிடைக்கும் பட்டசத்தில் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும், இதுபோன்ற இக்கட்டான நேரத்தை சமாளிக்கும் பட்சத்தில் சிறந்த வீரராக வலம் வரலாம் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி