ரயில் பெட்டி கழன்று தனியாக ஓடியதில் பயணிகள் பெரும் சிரமம்
ரயில் பெட்டி கழன்று
தனியாக ஓடியதில்
பயணிகள் பெரும் சிரமம்
புத்தளம் தினகரன் விசேட நிருபர்
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த காரியாலய ரயில் பெட்டியொன்று கழன்று
தனியாகியதால் பிரயாணிகள் அசெளகரியத்திற்கு ள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை 6.20 மணியளவில் மாதம்பை காக்காப்பள்ளி புகையிரத
நிலையங்களுக்கிடையே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. புத்தளத்திலிருந்து காலை 4.25
மணிக்கு புறப்படும் காரியாலய ரயிலிலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது.
புகையிரதத்திலுள்ள கடைசி பெட்டி கழன்ற நிலையில் சுமார் 300 மீற்றர் அளவில் ஏனைய
புகையிரத பெட்டிகள் பயணித்துள்ளன. முன்னாள் சென்ற புகையிரதம் மீண்டும் சிலாபம்
நோக்கி பயணித்து கழன்ற நிலையிலிருந்த புகையிரதப் பெட்டியை இணைத்துக்கொண்டு மீண்டும்
தனது பயணத்தை தொடர்ந்துள்ளது.