இலங்கை நிலைப்பாட்டில் மாற்றமில்லையெனவும் சர்வதேச கடல் சட்டத்தில் எவ்வித விட்டுக்
கொடுப்புகளும் முன்னெடுக்கப் போவதில்லை எனவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர்
ராஜித்த சேனாரத்ன நேற்றும் வலியுறுத்தினார்.
இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை
இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், கச்சதீவு உள்ளிட்ட கடல் பரப்பில் இந்திய மீனவர்களை
சுழற்சி முறையிலேனும் மீன்பிடிக்க அனுமதித்தல் உள்ளிட்ட 04 அம்ச கோரிக்கைகளை இலங்கை
தரப்பிடம் முன்வைக்கவிருப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பதாக இணைய
தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதற்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள்
மீன்பிடிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் இது
தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் செய்யப்
போவதில்லையெனவும் உறுதியாக தெரிவித்தார்.