வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கம் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி
நகர்ந்திருப்பதனால் காலை வேளையில் பெய்யும் மழையினளவு ஓரிரு தினங்களில் முடிவுக்கு
வருமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், உருவாகியுள்ள இடைப்
பருவப் பெயர்ச்சிக் காலநிலை காரணமாக தொடர்ந்தும் சில தினங்களுக்கு மாலை அல்லது இரவு
வேளைகளில் மழையுடன்கூடிய காலநிலை காணப்படுமெனவும் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி
கூறினார்.
இக்காலப்பகுதியில் நாடு முழுவதும் மின்னல் தாக்கம் கடுமையாகவிருக்கும். ஆகையினால்,
பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்கவேண்டு மெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டிலும் கடலிலும் அதிக மழை மற்றும் காற்று காணப்படும்.
மன்னாரிலிருந்து காலியூடாக மாத்தறை வரையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை
வரையான பிரதேசத்திலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
கடலில் தென்மேற்கு திசையில் வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோ
மீற்றர் ஆகும். இது மணித்தியால த்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் அதேசமயம்
இடி, மின்னலுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர்
வரை அதிகரிக்கலாமெனவும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த மழை நேற்று குறைவடைந்திருந்தது.