ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

யாழ்ப்பாணம், திஸ்ஸமஹராமயிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பம்

பொது நல வாய உச்சிமாநாடு:

யாழ்ப்பாணம், திஸ்ஸமஹராமயிலிருந்து வாகனப் பேரணி ஆரம்பம்

பொதுநலவாய மாநாட்டையொட்டி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ள வாகனப் பேரணி நேற்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய முன்றலிலிந்தும் திஸ்ஸமஹாராமயிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சாவகச்சேரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், வவுனியா, மிஹிந்தலை, திறப்பனை, கெகிராவ, கலேவல, பலாபத்வெல, அலவதுகொட, அக்குரணை, மாவனல்லை, கேகாலை, நிட்டம்புவ, கிரிபத்கொட, ஊடாக காலிமுகத்திடலை அடைய உள்ளது.

திஸ்ஸமகாராமயில் ஆரம்பமாகும் பேரணி ஹம்பாந்தோட்டை, பெலியத்த, மாத்தறை, அக்குறஸ்ஸ, காலி, வத்தேகம, அல்பிடிய, அம்பலங்கொடை, அளுத்கம, களுத்துறை, மதுகம, ஹொரண, பண்டாரகம, பாணந்துறை, மொரட்டுவை, பிலியந்தலை, பத்தரமுல்ல, கடுவெல ஊடாக காலிமுகத்திடலை அடையும்.

வாகன பேரணி ஒக்டோபர் 30 ஆம் திகதி காலி முகத்திடலை அடைய உள்ளதோடு இதனையொட்டி மக்களை அறிவூட்டும் பல நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கலை நிகழ்ச்சிகள், பொது நலவாய மாநாடு குறித்து மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் திட்டங்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி