இந்த ஆண்டு மிகவும் திறமையான வீராங்கனையாக உருவெடுத்துள்ளேன் என இந்திய டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்தார்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, 26 இவருக்கு இந்த ஆண்டு ராசியானதாக
அமைந்தது. வெற்றி மேல் வெற்றி பெற்று சாதித்தார். சமீபத்தில் ஜிம்பாப்வேயின் காரா
பிளாக்குடன் இணைந்து சீன பகிரங்க தொடரை கைப்பற்றி அசத்தினார். தவிர பான் பசிபிக்,
பிரிஸ்பேன், துபாய் சம்பியன்ஷிப், நியூ ஹெவன் உள்ளிட்ட தொடர்களில் இரட்டையர்
பிரிவில் பட்டம் வென்றார். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 5 பட்டம் பெற்றுள்ளார்.
இது குறித்து சானியா கூறியது :-
என் உடற் தகுதி நல்ல நிலையில் உள்ளது. தவிர, என் ‘சர்வீசிலும்’ முன்னேற்றம்
ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் திறமையான வீராங்கனையாக உருவெடுத்துள்ளேன்.
ஜப்பான், சீன பகிரங்க தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு வாரம்
மிகவும் விசேடமானதாக மாறிவிட்டது. காரா பிளாக் திறமையானவர். முன்னாள் முதனிலை
வீராங்கனையான இவருடன் விளையாடியது உற்சாகமானது. தவிர, களத்தில் இவருடனான
‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப் போவதால், அடுத்த ஆண்டு முழுவதும் ஜோடியாக பங்கேற்போம்.
எதிர்காலம் நம் கையில் கிடையாது.