ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 24
விஜய வருடம் புரட்டாசி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY,OCTOBER ,01, 2013
வரு. 81 இல. 233
 

சினிமாத் துணுக்குள்

சினிமாத் துணுக்குள்

உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளின் தந்தையுமான தோமஸ் அல்வா எடிசன் தான் இன்றைய சினிமாவிற்கும் தந்தையும் தாயுமாவார். அவர் கண்டுபிடித்த கருவியின் பெயர்: ‘கினிடாஸ்கோப்’ இந்த ‘கினிடாஸ்கோப்’ என்ற கருவியை பெட்டி போன்ற அமைப்பில் உருவாக்கினார்.

இந்தப் பெட்டியின் வெளிப்புறத்தில் ஒரு லென்சு அமைக்கப்பட்டிருந்தது. இந்த லென்சின் வழியாகப் பார்த்தால் உள்ளே படங்கள் தெரியும். இதிலுள்ள குறை, ஒருவர் மட்டுமே இதைப் பார்க்க முடியும் என்பதே. என்றாலும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு படம் பார்த்தனர்.

* தோமஸ் அல்வா எடிசன்தான் முதன் முதலில் காதல் காட்சியைப் படமாக்கியவர்.

இவர்தான் முதன்முறையாக பலரும் கண்டுகளிக்கும் விதத்தில் திரையில் காண்பிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். 1894ஆம் ஆண்டு ‘ரிச்மண்ட்’ என்ற இடத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

* இவர்தான் முதன்முதலில் திரைப்படம் தயாரிப்பதற்கான ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கினார். ஸ்டுடியோவின் பெயர் ‘பிளாக் மரியா’

* திரைப்படம் எடுக்கின்ற ஃபிலிமின் அளவு 35ணிணி என்பதை நிர்ணயம் செய்தவர் ‘எடிசன்’ தான்.

* ஃபிலிம்கள் கெமராவிலும், புரொஜக்டரிலும் ஒரே சீரான அளவில் சுழல்வதற்கு ஏற்ற விதத்தில் ஃபிலிமின் இரு புறங்களிலும் முதல்முறையாகத் துளையிட்டவர் ‘தோமஸ் அல்வா எடிசன்’ ஆவார்.

* சலனப்படத்திற்கு வித்திட்டவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘லூமியர் சகோதரர்கள்’ ஆவர். ஒருவரின் பெயர் லூயிஸ், இன்னொருவரின் பெயர் அகஸ்டஸ் லூமி. இந்த இரண்டு சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து ‘லியான்ஸ்’ நகரில் புகைப்படக் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவினர். திரைப்படத்தின்மேல் கொண்ட காதலால் தாங்கள் தயாரித்த கெமராவின் மூலம் தங்கள் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வெளியேறும் காட்சியைப் படம் பிடித்தார்கள். இப்படத்தை 1895ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் நாள் பாரீஸ் நகரிலுள்ள வியாபாரிகளுக்குப் போட்டுக் காண்பித்து அவர்களை வியக்க வைத்து, தொடர்ந்து படமெடுத்தனர்.

* இன்று ‘அனிமேஷன்.... அனிமேஷன்’ என்று பேசப்படுகிறதே, அதற்கு அன்றே வித்திட்டவர் ‘ஜோர்ஜ் மெல்லீஸ்’ ஆவார். இவர் 1902ல்  Thip to the Moon திரைப்படத்தில் அனிமேஷன்(Animation)  காட்சிகளை இடம்பெறச்செய்தார்.

* ஜோர்ஜ் மெல்லீஸ் தான் இன்று பேசப்படும் தந்திரக் காட்சிகளுக்கு வித்திட்டவர். மேலும் இவர் Disscive, Fade in, Fade out, Slow Motion, Speed motionபோன்ற திரைக் கலை நுட்பங்களை திரைப்படத்தில் இடம்பெறச்செய்தவர்.

* குளோசப் காட்சியை எத்தகைய இடத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அறிவித்தமுன்னோடி ‘எட்வின் போர்ட்டர்’ ஆவார். ‘எடிட்டிங்’ கிலும் சாதனை செய்தவர். இன்றைய அக்ஷன் படங்களுக்கு முன்னோடியான இவர், இயக்கி தயாரித்த (தி கிரேட்ட்ரெய்ன் ரொபரி’ (1903) அன்று மகத்தான வசூலைத் தந்தது.

* எடிட்டிங்கால் அடுத்தடுத்து காட்சிகளை உருவாக்கி மக்களை மிகவும் கவர்ந்த இயக்குநர் ‘சிசில் ஹேப்வொர்த்’ ஆவார் இவரின் சாதனைப் படம் ‘ரெஸ்க்யூடு பைரோவர்’ (1905).

* திரைப்படத் துறையில் பல மாறுதல்களைச் செய்து சாதனை புரிந்தவர் இயக்குநர் ‘டேவிட் வார்க் கிரிஃபித்’ ஆவார் இவரை ‘திரைப்படத்தின் தந்தை’ எனப் பாராட்டுகிறார்கள். குளோசப் காட்சிகளுக்கு தனி அந்தஸ்தை உருவாக்கியவர். மேலும் திரைப்படக் காட்சிகளை விறுவிறுப்பாக்கிக் காட்டவேண்டும் என்பதற்காக இரண்டு வெவ்வேறு காட்சிகளை“Cross Cutting என்னும் முறையில் எடிட்டிங்செய்து சாதனை புரிந்தவர்.

* கிரிஃபித் தான் முதன்முதலில் வெளிப்புறங்களில் படம் எடுத்தவர்.

* திரைப்படத்தில் லோங் ஷொட், மீடியம் ஷாட், மீடியம் குளோசப் ஷாட், மீடியம் லோங் ஷொட் குளோசப் ஷொட், டைட் குளோசப் ஷொட் போன்ற பல்வேறு ‘ஷொட்’களில் தேவைக்கேற்ப படம் பிடித்துக் காண்பிக்க முடியும் என்பதை சிந்தித்து செயல் படுத்தியவர் ‘கிரிஃபித்’ தான்.

* முதன்முறையாக பிரம்மாண்டமான படம் எடுத்துச் சாதனை புரிந்தவர்’ கிரிஃபித்’ ஆவார். இவர் உருவாக்கிய ‘தி பார்த் ஆஃப் எநேஷன்’, இன்ட்டாவரன்ஸ்’ (முறையே 1915, 1916) போன்ற படங்கள் இன்று திரைப்பட வல்லுனர்களால் போற்றப்பட்டு வருகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி