சவூதி அரசின் அனுசரணையில் உலகெங்கும் 1400 பேருக்கு ஹஜ் வாய்ப்பு
சவூதி அரசின் அனுசரணையில் உலகெங்கும் 1400 பேருக்கு ஹஜ் வாய்ப்பு
சவூதி அரேபியாவின் அனுசரணையில் உலகெங்குமிருந்து 1,400 பேருக்கு ஹஜ் கடமையை
நிறைவேற்றுவதற்கு உதவ மன்னர் அப்துல்லாஹ் பின் அப்தலஸிஸ் உத்தரவிட்டுள்ளார்.
உலகெங்குமுள்ள முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்தும் திட்டத்தில் மன்னர் இந்த உத்தரவை
பிறப்பித்ததாக சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சர் சலாஹ் அல்ஷெய்க் நேற்று முன்தினம்
ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார். இதன் மூலம் இலங்கை உட்பட உலகெங்கும் இருந்து 1,400
பேருக்கு சவூதி அரசின் செலவில் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும் கடந்த காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் 22,000 க்கும் அதிகமான
யாத்திரிகர்களுக்கு சவூதி அரசு அனுசரணை வழங்கியுள்ளது.