ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER , 17, 2013
வரு. 81 இல. 221
 

மெக்சிகோவில் புயல் தாக்கி 24 பேர் பலி

மெக்சிகோவில் புயல் தாக்கி 24 பேர் பலி

மெக்சிகோவில் புயல் தாக்கியதில் 24 பேர் பலியாகினர். மெக்சிகோவில் பசிபிக் கடலில் இன்கிரிட் என்ற புயல் உருவானது. அது பலவீனம் அடைந்து மான்ஷானியோ துறைமுக பகுதியில் கரையை கடந்தது.

இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. அதை தொடர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நிலச் சரிவும் ஏற்பட்டது.

குயரெரோ கடற்கரை மாகாணத்தில் அகாபுல்கோ புறநகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு பூமிக்குள் புதைந்தது. அதில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். 3 பேர் ஆற்று வெள்ளத்திலும், ஒருவர் வீட்டு சுவர் இடிந்து விழுந்தும் இறந்தனர்.

குயெர்ரோ நகரில் மலைப் பகுதியில் வாகனம் கவிழ்ந்து உருண்டதில் 8 பேர் பலியாகினர். அது போன்று பியூப்லா, ஒயாசாகா உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலச்சரிவுகளில் சிக்கி இறந்துள்ளனர்.

மொத்தத்தில் மெக்சிகோவில் புயலில் சிக்கி 24 பேர் பலியாகி உள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி