களுத்துறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கடும் மழை, வெள்ளம் காரணமாக சிறிய அளவிலான
மரக்கறிச் செய்கைகள் நாசமாகியுள்ளன. கடும் காற்று, மழை, வெள்ளம் காரணமாக
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மரக்கறி செய்கை, வாழை என்பன வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளதாக இச்செய்கையில் ஈடுபட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். இடை இடையே
தொடர்ந்தும் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. (ஐ-ஞ)