வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

கராச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி

கராச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; 12 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள முக்கியமான சந்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் நெருக்கடி அதிகமான சந்தைக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து கராச்சி நகரில் கடந்த 5 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

கராச்சியில் தொடர்ந்து நடைபெறும் வன்முறையால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் நபில் கபோல் வலியுறுத்தியுள்ளார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»