வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

பாக். இராணுவ அதிகாரிகள் 200 கோடி ரூபா ஊழல்

பாக். இராணுவ அதிகாரிகள் 200 கோடி ரூபா ஊழல்

பாகிஸ்தானில் 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்து ள்ளது.

பாகிஸ்தான் அதிபராக முஷாரப் இருந்த போது இராணுவ அதிகாரிகளின் ஓய்வு நிதி 200 கோடி ரூபாய் அளவுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.

பங்கு சந்தை மோசமான நிலையில் இருந்த போது இந்த பணம் முதலீடு செய்யப்பட்டதால், மீண்டும் ஒரு ரூபாய் கூட திரும்ப எடுக்க முடியவில்லை.

இந்த அளவுக்கு இழப்பீட்டை இராணுவ நிர்வாகத்துறை சேர்ந்த ஜாவீத் அஷ்ரப், சயீதஸ் ஜபார், ஹசன் பட் ஆகிய உயரதிகாரிகள் ஏற்படுத்தியதாக பொது கணக்குத் துறை கமிட்டி குற்றம் சாட்டியிருந்தது.

இது குறித்து ஆராய்ந்த பாகிஸ்தான் நாடாளுமன்றக் குழு 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்த இந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
»