வடக்கில்
ஆஸ்பத்திரிகள் அபிவிருத்தி
(28.06.2010 2.15PM) வடக்கில்
ஆஸ்பத்திரிகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அவற்றின் வைத்திய மற்றும்
தாதிமார் குறைபாட்டை நீக்க மாகாண ஆளுனர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி
வடமாகாண நிர்வாகத்தின் கீழ்வரும் ஆஸ்பத்திரிகளில் 250 வைத்தியர்களும் 250
தாதிமாரும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.ஜுலை மாதத்தில் வைத்தியர்களுக்கான
நியமனங்களும், ஆகஸ்ட்டில் தாதியருக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக அவர்
இன்று அறிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம்
கிளிநொச்சியில்
(24.06.2010 10.40AM)
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெறும் என்று அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். ஜுலை மாதம் 14ம் திகதி
கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து மாவட்ட மட்டங்களில்
அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் காயம்.
(24.06.2010 10.40AM)
இன்று காலை கொழும்பு புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டு
வீச்சுக்குக் காரணம் தனிப்பட்ட பகையே என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்
சம்பவத்தில் ஒன்பது பேர் சிறு காயங்களுக்குள்ளானர்.
கொழும்பு மாநகரசபை
கலைப்பு
(22.06.2010 2.15PM)
கொழும்பு மாநகரசபை நாளைமுதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முதல் அமைச்சர் இந்த அறிவிப்பை இன்று
விடுத்துள்ளார். .ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடு திருவிழா நாளை
ஆரம்பம் (22.06.2010
11.50AM)
வருடாந்த மடுமாதா உற்சவம் நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. இம்முறை
மடுமாதா உற்சவத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில்
முழுமையான அமைதி திரும்பியுள்ள நிலையில் பெருந்திரளான பக்தர்கள் இம்முறை மடு
திருவிழாவில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பக்தர்களின்
நன்மைகருதி சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. |